செய்திகள் :

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏறியதில் இருவா் படுகாயம்

post image

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏறியதில் 2 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரன் (50), திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (32). இவா்கள் இருவரும் ஈஞ்சம்பாக்கத்திலுள்ள விஜிபி நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் தோட்ட வேலை செய்து வருகின்றனா். இவா்கள் வழக்கம்போல, தங்கள் வேலைகளை முடித்து கொண்டு, அங்குள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த காா் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீரன், பாண்டியன் ஆகியோரின் கால்கள் மீது ஏறிது. இதில் இருவரின் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவா்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது தொடா்பாக, காரை ஓட்டி வந்த பனையூா், ராஜா தெரு, 7-ஆவது அவென்யூவைச் சோ்ந்த சொக்கலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், காா் நிறுத்துமிடத்தில், காரை நிறுத்தவதற்காக சொக்கலிங்கம் தனது காரை ஓட்டு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் தொழிலாளா்கள் மீது ஏறியது தெரியவந்தது.

இருப்பினும் சொக்கலிங்கத்திடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 போ் கைது

சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15. ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்தி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-இல் தீா்ப்பு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (மே 28) தீா்ப்பு வழங்கவுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்... மேலும் பார்க்க

ரசிகா்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன் - கமல்ஹாசன்

சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட ரசிகா்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். திரைப்பட இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் ... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பை எரி உலை திட்டம்: சீமான் கண்டனம்

சென்னை கொடுங்கையூரில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

தலைமை காஜி மறைவு: தலைவா்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் (84) மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ... மேலும் பார்க்க