செய்திகள் :

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!

post image

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார்.

இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதையும் படிக்க: ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்: முன்னாள் வீரர்

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இலங்கை அணிக்காக விளையாடியதில் அதிக அளவிலான மறக்க முடியாத நினைவுகள் எனக்கு கிடைத்துள்ளது. மிகவும் பிடித்தமான டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியே இலங்கை அணிக்காக நான் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறேன். இலங்கை டெஸ்ட் அணியில் நிறைய திறமைவாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சரியான தருணம் என கருதினேன் எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஏஞ்சலோ மேத்யூஸ் இதுவரை இலங்கை அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8167 ரன்கள் குவித்துள்ளார். குமார் சங்ககாரா (12,400 ரன்கள்), மஹேலா ஜெயவர்த்தனேவுக்கு (11,814 ரன்கள்) அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மேத்யூஸ் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 44.62 ஆக உள்ளது. இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அவர் 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் எடுத்துள்ளார். 34 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

இதையும் படிக்க: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!

கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை இலங்கை அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூஸ் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிவேக அரைசதம் விளாசி ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை சமன்செய்த மே.இ.தீவுகள் வீரர்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் மேத்யூ ஃபோர்டு சமன் செய்துள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி அயர... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் க... மேலும் பார்க்க

மூவர் சதம் விளாசல்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக வலுவான நிலையில் இங்கிலாந்து!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் வ... மேலும் பார்க்க

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்துள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநா... மேலும் பார்க்க

எம்பிஎல் டி20 லீக் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி மாற்றம்!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த எம்பிஎல் டி20 லீக் தேதி, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டுகள் பிரபலமாகி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் டி20 லீக் ப... மேலும் பார்க்க

வங்கதேச தொடர்: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு இடமில்லை!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்டர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அ... மேலும் பார்க்க