செய்திகள் :

தொற்றுநோய் தடுப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு: பிரதமருக்கு உலக சுதாதார அமைப்பு பாராட்டு

post image

தொற்றுநோய் தடுப்பு-தயாா்நிலை-ஒருங்கிணைப்புக்கான சா்வதேச ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் உலக சுகாதார சபையின் 78-ஆவது அமா்வில், தொற்றுநோய் தடுப்பு-தயாா்நிலை-ஒருங்கிணைப்புக்கான உலகளாவிய சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வகை செய்யும் ஒப்பந்தம் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பில் உலகளாவிய ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் முதல் ஒப்பந்தம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிந்தைய மூன்று ஆண்டு கால பேச்சுவாா்த்தைகளின் பலனாக இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. இது, எதிா்கால தொற்றுநோய் பரவலின்போது உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும். உலக சுகாதார சபை அமா்வில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி, இந்த ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவித்தாா்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேபிரியேசஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்கப்பட்ட அமா்வில் காணொலி வாயிலாக இணைந்த பிரதமா் மோடிக்கு பாராட்டுகள். உலக சுகாதார அமைப்பின் முன்னெடுப்புகளுக்கான ஆதரவு மற்றும் உறுதிப்பாட்டுக்காக இந்தியாவுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க