செய்திகள் :

ஏலத் தொகையில் 31% அபராதமாக அளித்த திக்வேஷ் ரதி..!

post image

லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதியின் மொத்த அபராதத் தொகை ரூ.9 லட்சத்தைக் கடந்துள்ளது.

தில்லியைச் சேர்ந்த 25 வயதாகும் சுழல்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி ஐபிஎல் போட்டிகளில் லக்னௌ அணிக்காக விளையாடி வருகிறார்.

சிறப்பாக பந்துவீசும் திறமைக் கொண்ட இவர் எதிரணியினரின் விக்கெட்டை எடுத்தபிறகு அவர்களின் பெயரை குறிப்பெழுதுவது போல் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடி வருகிறார். சில சமயங்களில் வீரர்களை முறைப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.

திக்வேஷ் ரதியின் நோட்புக் செலிபிரேஷன்

இந்தமாதிரியாக நடப்பு ஐபிஎல் தொடரில் 5 முறை ஈடுபட்டதால் அவருக்கு 5 தகுதியிழப்பு புள்ளிகள் பெற்றதால், அடுத்து நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போட்டியிலும் திக்வேஷ் ரதிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கூட்டினால் ரூ. 9.37 லட்சம் ஆகியிருக்கிறது.

இந்த ஐபிஎல் சீசனில் ரூ. 30 லட்சத்துக்கு எடுக்கப்பட்ட இவரது சம்பளத்தில் 31.23 சதவிகிதம் அபராதத்திலேயே கழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லக்னௌ அணி மோசமாக விளையாடினாலும் திக்வேஷ் ரதியின் பந்துவீச்சை அசத்தலாக இருக்கிறது.

இந்த நோட்புக் செலிபிரேஷனை கைவிடுத்து பந்துவீசுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் இந்திய அணியில் இடம்பிடிக்க அனைத்து தகுதியும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அழுத்ததிற்கு உள்ளாகாமல் எப்போதும்போல விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, உர... மேலும் பார்க்க

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மதீஷா பதிரானா..! சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியுள்ளார். 22 வயதாகும் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் 2022-இல் அறிமுகமானார்.... மேலும் பார்க்க

2 சீசனிலும் 10 தோல்விகள்: ஆர்சிபி, மும்பைக்கு அடுத்து சிஎஸ்கே!

ஐபிஎல் வரலாற்றின் மோசமான சாதனைகள் பட்டியலில் சிஎஸ்கே அணியும் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே தற்போது மோசமான சாதனைகளை நிக... மேலும் பார்க்க

தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாளர் கடிதம்

தில்லி - மும்பை இடையிலான போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இ... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை சமன்செய்த நூர் அகமது!

ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வீரருடன் சிஎஸ்கே வீரர் நூர் அகமது சமன்செய்துள்ளார். 20 வயதாகும் ஆப்கன் வீரர் சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் விளையாட... மேலும் பார்க்க

மும்பையை அச்சுறுத்தும் மழை: பிளே-ஆஃப் செல்லப்போவது யார்?

மும்பையில் பெய்துவரும் கனமழையால், இன்றிரவு(மே 21) நடைபெறும் ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், பொதுமக்கள் க... மேலும் பார்க்க