செய்திகள் :

ரெய்டு நடப்பதைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

post image

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றிருக்கும் நிலையில், இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?

திரு. ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?

அறிவாலய மேல் மாடியில் சிபிஐ ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எது ஸ்டாலினின் கை?

அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு எஃப்ஐஆர் லீக் செய்த கை ஸ்டாலினின் கை. ஜாபர் சாதிக் போன்ற சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "சார்"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.

அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.

தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!

7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!

அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழி வந்த என்னிடம் பேச எந்த அருகதையும் இல்லை!

கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!

இதற்கெல்லாம் பின்னர் வருவோம்...

நான் கேட்ட கேள்வி என்ன?

#யார்_அந்த_தம்பி ? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, அமலாக்கத் துறை ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.

உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன்- யார்_அந்த_தம்பி? என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களோடுதான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம்: கே. என். நேரு

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இடையில்தான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம் என்றார் திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு.புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

துணை வேந்தர்கள் நியமனம்: சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை!

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டதாக நெல்லைய... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி

விழுப்புரம் மாவட்டம், அரசூர் மலட்டாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி சகோதரிகள் இருவர் உள்பட மூவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூரைச் சேர்ந்த பழனி... மேலும் பார்க்க

செங்கல் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சரிட... மேலும் பார்க்க

அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம்: தமிழக அரசு விளக்கம்!

அடையாறு நதியஒ சீரமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் அவசியம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அடையாறு நதியை சீரமைக்க தமிழ்நா... மேலும் பார்க்க