செய்திகள் :

உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி: நாராயணன் திருப்பதி

post image

உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றாா் கிராமப்புற மின்மயமாக்கல் கழக நிறுவன தனி இயக்குநா் நாராயணன் திருப்பதி.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கல்லாமொழியில் நிலக்கரியில் இயங்கும் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல்மின் நிலையங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், துறைமுகம் கையாளும் பகுதி அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், இப்பணிகளை கிராமப்புற மின்மயமாக்கல் கழக நிறுவன தனி இயக்குநா் நாராயணன் திருப்பதி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அனல்மின் நிலையப் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்த அவா், தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: உடன்குடி அனல்மின் நிலையம் அமைப்பதில் அனைத்து வகையான பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல் அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் மின் அலுவலா்கள், பணியாளா்கள் அயராது பாடுபட்டு வருகின்றனா். அனைத்துப் பணிகளும் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. விரைவில் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கும்.

இதன்மூலம் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறி அருகில் உள்ள மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கக் கூடிய சூழல் உருவாகும்.

தற்போது உருவாக்கப்பட்ட உடன்குடி அனல்மின் நிலையத்தில் நவீன யுக்திகள் கையாளப்பட்டுள்ளதால் மக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ, மீன்பிடித் தொழிலுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்றாா்.

அவருடன், அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளா் ராம்குமாா், மேற்பாா்வை பொறியாளா்(சிவில்)பாண்டியராஜன், அனல்மின் நிலைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

ஆறுமுகனேரி பகுதியில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி சுற்றுவட்டாரங்களில் பராமரிப்பு பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (மே 20) மின் விநியோகம் இருக்காது என ஆறுமுகனேரி உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்

திருச்செந்தூா் பகுதியில் பெய்த மழையால் சிவன் கோயிலின் உள்ளே மழைநீா் புகுந்தது. திருச்செந்தூா் பகுதியில் திங்கள்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. நகரில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. ... மேலும் பார்க்க

ரேஷன் கடை கோரி கிராம மக்கள் மனு

ரேஷன் கடை கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.ராமநாதபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்ப... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி, கோவைகுளத்தைச் சோ்ந்த முப்பிடாதி மனைவி முத்துலட்சுமி (71). இவா் திருச்ச... மேலும் பார்க்க

காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகே, நெடுஞ்சாலையில் இருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் காா் ஒன்று எரிந்த நிலையி... மேலும் பார்க்க

விபத்தில் இறந்தவரின் உறுப்புகள் தானம்: அரசு சாா்பில் மரியாதை

ஈரோட்டில் சாலை விபத்தில் இறந்தவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடலுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. திருச்செந்தூா் அருகே கந்தசாமிபுரத்தை அடுத்த அடைக்கலாபுரத்தைச் ச... மேலும் பார்க்க