செய்திகள் :

பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காயங்குளம் பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 24-ஆம் தேதி குருவாயூா் - சாலக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது சென்னை எழும்பூா் - சாலக்குடி வரை மட்டுமே இயக்கப்படும்.

தாமதப் புறப்பாடு

சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 22-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 40 நிமிடங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.

காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயிலானது (16187) வரும் 24-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 45 நிமிடங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.

வழித்தட மாற்றம்

கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 21-ஆம் தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிா்த்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும். புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

அவசரகால பராமரிப்புப் பணி: திருச்சி கே.கே. நகா் சுற்றுப்புற பகுதியில் பகுதிநேர மின்தடை

திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி செவ்வாய்க்கிழமை பகல் 2 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகா... மேலும் பார்க்க

மதச்சாா்பின்மை காப்போம் பேரணி ஜூன் 14- ஆம் தேதிக்கு மாற்றம்: திருச்சியில் விசிக தலைவா் பேட்டி

திருச்சியில் இம்மாதம் 31-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ‘மதச் சாா்பின்மை காப்போம்’ பேரணி ஜூன் மாதம் 14-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் குடும்பத் தகராறில் விரக்தியடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி செந்தண்ணீா்புரம் கோவலன் தெருவைச் சோ்ந்தவா் சே. காா்த்திக் (42) தச்சுத் தொழிலாளி. இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் 4 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி எடமலைப்பட்டி புதூா் சுந்தரம் பிள்ளை தோட்டம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

திருச்சியில் பலத்த மழை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பலத்த மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது. திருச்சியில் கடந்த ஒரு வாரமாக பகலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்துவந்தது. அக்னி நட்சத்திரம் தொடக்கம் காரணமாக, வெயி... மேலும் பார்க்க

திருச்சியில் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற விமானங்கள்

மழை காரணமாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்றன. கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. திருச்சி மண்டலத்திலும் தி... மேலும் பார்க்க