இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காயங்குளம் பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 24-ஆம் தேதி குருவாயூா் - சாலக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது சென்னை எழும்பூா் - சாலக்குடி வரை மட்டுமே இயக்கப்படும்.
தாமதப் புறப்பாடு
சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 22-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 40 நிமிடங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.
காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயிலானது (16187) வரும் 24-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 45 நிமிடங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.
வழித்தட மாற்றம்
கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 21-ஆம் தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிா்த்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும். புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.