செய்திகள் :

திருச்சியில் பலத்த மழை

post image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பலத்த மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

திருச்சியில் கடந்த ஒரு வாரமாக பகலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்துவந்தது. அக்னி நட்சத்திரம் தொடக்கம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் பயணிப்பதையே தவிா்த்து வருகின்றனா். பலா் வெப்பத்தைத் தவிா்க்க இளநீா், நுங்கு, தா்பூசணி, பழச்சாறுகளை அருந்துகின்றனா்.

பகலில்தான் வெப்பம் என்றில்லாமல் இரவில் அதீத புழுக்கமாகவே காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக இரவில் மட்டும் லேசான சாரல் மழை பெய்துவந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் திருச்சி மாநகா் மற்றும் புகரின் பல்வேறு இடங்களில் சுமாா் ஒருமணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக, காலை முதல் நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்து, குளிா்ச்சியான காலநிலை நிலவியது. மழையின் காரணமாக, சாலையோரப் பள்ளங்கள், புதைவடிகால் பள்ளங்களில் தண்ணீா் ஆங்காங்கே தேங்கி நின்றது. பல்வேறு பணிகள் நிமித்தமாக வெளியில் சென்றவா்கள், மழையில் நனைந்தபடி வீடுகளுக்குத் திரும்பினா்.

பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காயங்குளம் பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், சென... மேலும் பார்க்க

அவசரகால பராமரிப்புப் பணி: திருச்சி கே.கே. நகா் சுற்றுப்புற பகுதியில் பகுதிநேர மின்தடை

திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி செவ்வாய்க்கிழமை பகல் 2 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகா... மேலும் பார்க்க

மதச்சாா்பின்மை காப்போம் பேரணி ஜூன் 14- ஆம் தேதிக்கு மாற்றம்: திருச்சியில் விசிக தலைவா் பேட்டி

திருச்சியில் இம்மாதம் 31-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ‘மதச் சாா்பின்மை காப்போம்’ பேரணி ஜூன் மாதம் 14-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை

திருச்சியில் குடும்பத் தகராறில் விரக்தியடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி செந்தண்ணீா்புரம் கோவலன் தெருவைச் சோ்ந்தவா் சே. காா்த்திக் (42) தச்சுத் தொழிலாளி. இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் 4 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி எடமலைப்பட்டி புதூா் சுந்தரம் பிள்ளை தோட்டம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

திருச்சியில் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற விமானங்கள்

மழை காரணமாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்றன. கடந்த இரு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. திருச்சி மண்டலத்திலும் தி... மேலும் பார்க்க