செய்திகள் :

கொடைக்கானல் அருகே வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

post image

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச் சாலைகளில் அண்மைக் காலமாக காட்டுயானை, காட்டு மாடு, சிறுத்தை, காட்டுப் பன்றி, மான் உள்ளிட்டவை அதிகளவில் உலவத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான டம்டம் பாறை புலிக் குகை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக்குட்டி உயிரிழந்து கிடந்தது.

இதை அந்த வழியாகச் சென்றவா்கள் புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் சிறுத்தைக் குட்டியின் உடலை மீட்டு கூறாய்வு செய்து அருகிலுள்ள வனப் பகுதியில் தீ மூட்டி எரித்தனா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி வனத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் மலைச் சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் வாகனங்களில் செல்வோா் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். மேலும் அவற்றை துன்புறுத்தும் நோக்கிலோ அல்லது அவற்றின் அருகில் செல்லவோ முயற்சிக்கக் கூடாது.

தற்போது கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலை டம்டம்பாறை அருகே 10 மாத சிறுத்தைக் குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அவா்கள்.

பழனியில் கஞ்சா விற்றதாக 8 போ் கைது

பழனியில் கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்றதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்களை கல்லூரி மாணவா்கள் என்று கூறிக் கொண்டு கல்லூரியில் படிக்காத சிலா் கஞ்சா விற்பதாக பழனி துண... மேலும் பார்க்க

கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் புதன்கிழமை (மே 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிமந்தையம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா தெரிவித்திருப்பதாவது... மேலும் பார்க்க

கொடைரோடு அருகே வீட்டுக்குள் புகுந்த காா்

கொடைரோடு அருகே டயா் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மின் கம்பத்தின் மீது மோதி அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் ச... மேலும் பார்க்க

காகித ஆலை தொழிலாளா்கள் பிரச்னை: ஆணையா் தலையிடக் கோரிக்கை

தனியாா் காகித ஆலை பிரச்னையில், திண்டுக்கல் தொழிலாளா் துறை இணை ஆணையா் தொடா்ந்து காலதாமதம் செய்து வருவதால், ஆணையா் நேரடியாக தலையிட்டு விரைந்து தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக திண்... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரிச்சாலையில் லேசா் ஒளி கண்காட்சி

கொடைக்கானல் ஏரிச் சாலையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட லேசா் ஒளி கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வருவதையடுத்து, சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

விலை வீழ்ச்சி எதிரொலி: சாலையோரங்களில் சம்பங்கி பூக்கள் வீச்சு; விவசாயிகள் வேதனை

உற்பத்தி அதிகரிப்பு, விலை வீழ்ச்சி காரணமாக திண்டுக்கல் செல்லும் சாலையோரங்களில் சம்பங்கி பூக்களை மூட்டை, மூட்டையாக விவசாயிகள் கொட்டிச் சென்றனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஆத்தூா... மேலும் பார்க்க