செய்திகள் :

"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

post image

இலங்கை நாட்டைச் சேர்ந்தவரின் அடைக்கலம் கோரும் மனு மீதான விசாரணையின்போது, இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபரின் மனுவை இன்று விசாரித்தது.

இவர் 2018ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அகதிகள் முக்கம் (கோப்பு படம்)
அகதிகள் முக்கம் (கோப்பு படம்)

2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இவரது தண்டனைக்காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டது.

சிறையில் இருந்து வெளியான உடனேயே அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், நாடு கடத்தப்படும் வரை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துவந்த மனுதாரர், தான் விசாவுடன் இந்தியாவுக்கு வந்ததாகவும், தனது உயிருக்கு இலங்கையில் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது மனைவியும் குழந்தைகளும் இந்தியாவில் வாழ்வதாகவும், தான் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடுப்பு காவலில் இருப்பதாகவும், நாடுகடத்தல் செயல்முறை தொடங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கில் நீதிபதி தீபங்கர் தத்தா, "இந்தியா உலகம் முழுவதுமிருந்து வரும் அகதிகளை வரவேற்க வேண்டுமா? நாங்கள் ஏற்கெனவே 140 கோடி மக்கள் தொகையுடன் சிரமத்தில் இருக்கிறோம். இது ஒன்றும் வெளி நாட்டவர்களை மகிழ்விக்கும் தர்மசாலை அல்ல." என்றும் கூறியுள்ளார்.

மனுதாரரின் வழக்கறிஞர் அரசியலமைப்பின் பிரிவு 21 (உயிர் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்) மற்றும் பிரிவு 19, பேச்சு மற்றும் இயக்க சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்குவதாக வாதிட்டார்.

நீதிபதி தத்தா, மனுதாரர் சட்டப்படி கைது செய்யப்பட்டிருப்பதனால் பிரிவு 21 மீறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பிரிவு 19 இந்திய குடிமக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அத்துடன் "மனுதாரர் இந்தியாவில் தங்க என்ன உரிமை இருக்கிறது?" என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கறிஞர், மனுதாரர் ஒரு அகதி என்றும் அவரது சொந்த நாட்டில் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் வாதிட்டதற்கு, அவரை வேறு நாடுகளுக்குச் செல்லுமாறு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை : `கேரளா அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ - உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதி... மேலும் பார்க்க

`ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றதற்கு பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களில் பல்வேறு பாகுபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக பதவி ஏற்கும் ... மேலும் பார்க்க

Sofiya Qureshi: `உங்க முதலை கண்ணீரை நம்ப தயாராக இல்லை’ - பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

`பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய சகோதரியை வைத்து பதில் சொல்லி இருக்கிறோம்’ என ராணுவ அதிகாரி சோபியா குரேஷியாவை மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மிக மோசமான முறையில் பேசி இருந்தார். ராணுவ அதி... மேலும் பார்க்க

NEET: `கரண்ட் கட் ஆனதால் பாதிப்பு' - மாணவி வழக்கு; ரிசல்ட் வெளியிட தடை விதித்த உயர்நீதிமன்றம்!

`நீட் தேர்வின் போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவியொருவர் அளித்த புகாரை விசாரித்த மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு, 2024 நீட்-யுஜி தேர்வு முட... மேலும் பார்க்க

மா.சு மீதான வழக்கு: `விசாரணைக்கு ஒப்புதலை யாரிடம் பெறவேண்டும்?' - உச்ச நீதிமன்றத்தில் எழுந்த கேள்வி

மா. சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது செய்ததாகச் சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கு அவரை விசாரிப்பதற்கான ஒப்புதலை அரசிடம் பெற வேண்டுமா? அல்லது சபாநாயகர் இடம் பெற வேண்டுமா? என்ற முக்கிய கேள்வியை உச்ச நீ... மேலும் பார்க்க

`கணவரின் திருமணம் மீறிய உறவு; மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது’- டெல்லி நீதிமன்றம்

கடந்த ஆண்டு டெல்லியில் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் குடும்பத்தினர் கொடுத்த புகாரில், 'எங்கள் பெண்ணின் கணவருக்கு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன் திர... மேலும் பார்க்க