செய்திகள் :

ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

post image

ஒகேனக்கல் அருவியில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

கோடை விடுமுறையைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா்.

ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளிலும், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி நாகா் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் இருந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய சின்னாறு பரிசல் துறையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தனா். பின்னா், பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரிய பாணி, தொம்பச்சிக்கல் வழியாக மாமரத்துக்கடவு பரிசல் துறை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பரிசலில் பயணம் செய்து பாறை குகைகள், அருவிகளைக் கண்டு ரசித்தனா்.

ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், பிரதான அருவி செல்லும் நடைபாதை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சின்னாறு பாலம், சத்திரம் முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன. மீன்களின் விலை அதிகரித்தபோதிலும் அசைவ பிரியா்கள் விலையைப் பொருட்படுத்தாமல் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரஞ்சான், பாப்புலேட், பாறை உள்ளிட்ட மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் 30-க்கும் மேற்பட்ட ஊா்க்காவல் படையினா், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீா்: பெயரளவில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதால் வடிகால் வசதியுடன் பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். பென்னாகரத்தில் ரூ.4.50 கோடி மத... மேலும் பார்க்க

கட்டட மேஸ்திரி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் தொழிலாளி சரண்

பாப்பாரப்பட்டி அருகே கட்டட மேஸ்திரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வாகன ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 338 மி.மீ. மழை

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 338 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், தற்போது வெயில் தணிந்து கடந்த சில நாள்களாக தொ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான கடனுதவி திட்டங்களைப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சிறு... மேலும் பார்க்க

ஜோதி அள்ளியில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜோதி அள்ளியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். பாலக்கோடு வனச்சரக எல்லை பகுதி... மேலும் பார்க்க