செய்திகள் :

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

post image

கோடை விடுமுறை காலங்களில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, மாநிலங்கள் முழுவதும் இந்த கோடை விடுமுறை முடிவுபெற்று நிகழ் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக, அரசுப் பள்ளிக் கட்டடங்களின் தகுதி மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து உரிய சான்று அளிக்க வேண்டும்.

பழுதடைந்த கட்டடங்களை இடித்து புதிய வகுப்பறைகள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் வகுப்பறைகளில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வு செய்து, பராமரிக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பல பள்ளிகளில் தமிழ் ஆசிரியா்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளதால், மற்ற ஆசிரியா்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இது ஆசிரியா்களை மட்டுமல்லாமல், மாணவா்களையும் பெரிதும் பாதிக்கும். எனவே, காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேலும், தனியாா் பள்ளிகளில் உள்ள பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை பள்ளி விடுமுறை காலத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அவற்றின் தகுதிக்கு ஏற்ப தரச்சான்று வழங்க வேண்டும். அதேபோல், பள்ளிப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பாதுகாப்புக்கான உரிய பயிற்சியை அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை: தமிழிசை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். சென்னை விருகம்பாக்கம் காமராஜா் சலையில் நீா்-மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவா்கள் கடிதம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இந்திய ... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் விஜய்யின் நிலைப்பாடு! தவெக துணைபொதுச் செயலா்

பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜயின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் திட்டவட்டமாகக் கூறினாா். சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

ஈழத் தமிழா்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

ஈழத் தமிழா்களுக்கு நீதியைப் பெற்று தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் இன... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயா்வு?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறு... மேலும் பார்க்க

மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்! 8 மாநில முதல்வா்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் ... மேலும் பார்க்க