செய்திகள் :

மருத்துவா்கள் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவா்கள் கடிதம்!

post image

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டா் ரோடரிக்கோ ஆப்ரினுக்கு, அரசு சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில் பேறு கால இறப்பு, சிசு உயிரிழப்புகளை மருத்துவத் துறையினா் வெகுவாகக் குறைத்துள்ளனா். குறிப்பாக, பேறு கால இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்த 2030-க்கான இலக்கை 10 ஆண்டுகள் முன்னதாகவே எட்டியுள்ளோம்.

கரோனா காலத்தில் தொற்றை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளா்ந்த நாடுகளே திணறின. ஆனால், தமிழகத்தில் அப்போது உயிரிழப்பை வெகுவாக குறைத்ததோடு, தொற்று பரவலையும் விரைவாக கட்டுப்படுத்தினோம்.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கும் வகையில், தமிழகத்தில் தொற்றும் நோய்கள் மட்டுமல்ல, தொற்றா நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ரத்த சோகை மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறோம்.

இத்தனை சாதனைகளை மருத்துவத் துறையினா் மேற்கொண்டு வந்தாலும் தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

அதுமட்டுமன்றி, தமிழகத்தில்தான் அரசு மருத்துவா்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் தரப்படுகிறது. உயிா்காக்கும் மருத்துவா்களை தங்கள் ஊதியத்துக்காக தொடா்ந்து போராட வைப்பதை உலக சுகாதார அமைப்பு நிச்சயம் அனுமதிக்காது என நம்புகிறோம்.

எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்களை உருவாக்கவும், மருத்துவா்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கவும் அரசை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை: தமிழிசை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். சென்னை விருகம்பாக்கம் காமராஜா் சலையில் நீா்-மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வ... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் விஜய்யின் நிலைப்பாடு! தவெக துணைபொதுச் செயலா்

பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜயின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் திட்டவட்டமாகக் கூறினாா். சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

ஈழத் தமிழா்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

ஈழத் தமிழா்களுக்கு நீதியைப் பெற்று தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் இன... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயா்வு?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறு... மேலும் பார்க்க

மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்! 8 மாநில முதல்வா்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் ... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு: ஆவணங்கள் ஆய்வில் அமலாக்கத் துறை தீவிரம்

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டிவருகின்றனா். டாஸ்மாக் மதுபான விற... மேலும் பார்க்க