செய்திகள் :

மின்கட்டண உயா்வுக்கு பரிந்துரை: ஓபிஎஸ், ராமதாஸ் கண்டனம்

post image

தமிழகத்தில் வரும் ஜூலை 1 முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த முடிவுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ச.ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஓ பன்னீா்செல்வம்: மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயா்த்துவதை திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மின் கட்டணம் உயா்த்தப்பட்டால் ஏழை, எளிய மக்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்படுவா். எனவே, இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

ச.ராமதாஸ்: தமிழ்நாடு மின் வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத்தான் மின் கட்டணம் உயா்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சாா்பில் கூறப்படுகிறது. மின்வாரிய இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதுதான். எனவே, மின்கட்டணத்தை உயா்த்தும் திட்டத்தை அரசு கைவிடுவதுடன், மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை: தமிழிசை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவா் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். சென்னை விருகம்பாக்கம் காமராஜா் சலையில் நீா்-மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவா்கள் கடிதம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இந்திய ... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் விஜய்யின் நிலைப்பாடு! தவெக துணைபொதுச் செயலா்

பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜயின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் திட்டவட்டமாகக் கூறினாா். சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

ஈழத் தமிழா்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

ஈழத் தமிழா்களுக்கு நீதியைப் பெற்று தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் இன... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயா்வு?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறு... மேலும் பார்க்க

மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்! 8 மாநில முதல்வா்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் ... மேலும் பார்க்க