செய்திகள் :

என் நரம்புகளில் பாய்வது ரத்தமல்ல, கொதிக்கும் சிந்தூர்: பிரதமர் மோடி

post image

என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர் தான் ஓடுகிறது என்று பிகானேர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது,

பிகானேரில் கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்றேன். ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஒன்றை மறந்துவிட்டது. என் மனம் இன்று குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் ரத்தம் கொதிக்கின்றது. என் நரம்புகளில் பாய்வது ரத்தமல்ல, சூடான சிந்தூர்.

ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் இனி வர்த்தகமோ, பேச்சுவோ இருக்காது, பேச்சு நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும் தான்.

இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். பஹல்காமில் இந்திய பெண்களின் நெற்றிப்பொட்டான சிந்தூர் அழிக்கப்பட்டது, 140 கோடி இந்தியர்களும் அதன் வலியை உணர்ந்தனர். அவர்களுக்குக் கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்க இந்தியா முடிவு செய்தது.

இதன் காரணமாகவே ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத தளங்களையும் 22 நிமிடத்தில் இந்தியப் படைகள் அழித்துள்ளனர். நமது முப்படைகளில் சக்கர வியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்குப் பாகிஸ்தான் பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்து அதை நிரூபித்துள்ளனர்.

இந்தியாவின் ரத்தம் மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டுவிட்டன. இந்தியா அமைதியாக இருக்கும் என்று எண்ணியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என்று அவர் பேசினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா சார்பில் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வரும் மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதிக்கு செல்கிறார்.பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ஆய்வு செய்த எம்.பி., அரசு அதிகாரிகளைக் கொட்டிய தேனீக்கள்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுத் திட்டத்தை ஆய்வு செய்த எம்.பி. மற்றும் அதிகாரிகளை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின், பதாரியா தொகுதியில், மக்களவை உறுப்பின... மேலும் பார்க்க

தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று மாலை திடீ... மேலும் பார்க்க

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர். பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு: மத்திய அரசு வாதம்

புது தில்லி: நாட்டில் வக்ஃப் அமைப்பு என்ற பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பது கொடூர... மேலும் பார்க்க

'பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்' - சுப்ரமணியன் சுவாமி

பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும் என்று ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிகார் பாட்னாவில் ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் செய்... மேலும் பார்க்க