செய்திகள் :

மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!

post image

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (Ola Roadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரான ஓலா நிறுவனம் ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பைக்கை பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியிருந்தாலும், தவிர்க்க இயலாத காரணங்களால் இத விற்பனை தாமதமாகி வந்தது. இதற்கான விநியோகம் வருகிற 23 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் பெங்களூருவிலும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த பைக் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஓலா பைக் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் மற்றும் எக்ஸ்+.

சிறப்பம்சங்கள்

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ்

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸில் 2.5 kWh, 3.5 kWh மற்றும் 4.5 kWh மின்கலன்களில் மூன்றில் ஒன்றைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சமாக மணிக்கு 118 கி.மீ. வரை செல்லக்கூடிய வகையிலும், மணிக்கு 0 முதல் 40 கி.மீ. தூரத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 252 கி.மீ. வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ்

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸில் 4.5 kWh மற்றும் 9.1 kWh மின்கலன்களில் இரண்டில் ஒன்றைத் தேர்தெடுத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சமாக மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இது மணிக்கு 0 முதல் 40 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கு 2.7 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது.

இதில், மேலும் ஓர் சிறப்பம்சமாக சிறிய மின்கலனைத் தேர்வு செய்பவர்களுக்கு ஒரே சார்ஜில் 252 கி.மீ. தூரமும், பெரிய மின்கலனைத் தேர்வு செய்பவர்களுக்கு 501 கி.மீ தூரமும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

விலை

மேற்கூரிய அனைத்து விவரங்களுடனும் ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸின் எக்ஸ் ஸோரூம் விலை ரூ.99,999-மாகவும், ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸின் எக்ஸ் ஸோரூம் விலை ரூ. 1.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் ரெனால்ட் கார்கள்!

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த க... மேலும் பார்க்க

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியாணா மநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் ... மேலும் பார்க்க

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க