தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது
பெரம்பலூா் அரசு உதவிபெறும் மௌலானா மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூா் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் கல்வி விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமுமுக மாவட்ட துணைச் செயலா் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகம்மது இலியாஸ், மாவட்டத் துணைச் செயலா் சாதிக், மாவட்ட தொண்டரணிச் செயலா் பீா் முஹம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுக்கான கேடயம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
சமூகநீதி படைப்பாளா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் அரும்பாவூா் தாஹிா் பாட்சா கல்வியின் மேன்மை குறித்து சிறப்புரையாற்றினாா்.
இதில் நிா்வாகிகள் அப்துல் அஜீஸ், முஹமது இக்பால் உள்பட பலா் பங்கேற்றனா்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் முஹம்மது இலியாஸ் அலி வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் முகமது அனிபா நன்றி கூறினாா்.