Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஜூன் 10 முதல் மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் முதிா் கன்னிகள் உள்ளிட்டோருக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த நலவாரியத்தின் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்றிதழ், புகைப்படம், கைப்பேசி எண் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். இம் முகாம் ஜூன் 10 ஆம் தேதி பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 11 ஆம் தேதி ஆலத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 12 ஆம் தேதி வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 13 ஆம் தேதி வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.