நெய்குப்பை கிராமத்தில் தீ மிதித் திருவிழா
15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீமிதி விழா மே 19 ஆம் தேதி குடியழைத்தல், கொடி ஏற்றுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, அம்மனுக்கு திருக்கல்யாணம், முனிக்கு சோறு ஊட்டுதல், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி அழைக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோா் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.