செய்திகள் :

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை வேண்டுமா?

post image

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 383/TEMP-POSTS/HR/SW/2024-25

பணி: Sr. Software Trainee-I

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: கணினி அறிவியல் பிரிவில் முதுகலை, எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

பணி: Jr. Software Trainee-I

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,000

தகுதி: கணினி அறிவியல் , ஐடி பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

பணி: Software Professionals-I

காலியிடங்கள்: 10

வயதுவரம்பு: 40--க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 60,000

தகுதி: கணினி அறிவியல் , ஐடி, ஏஐ, டேட்டா அறிவியல் மற்றும் டெக்னாலஜி, பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 450 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா-வில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) 4,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வ... மேலும் பார்க்க

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' மற்றும் 'டி' தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ... மேலும் பார்க்க

2,299 கிராம உதவியாளா்கள் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழ்நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளா் காலியிடங்களை நிரப்பும் நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் நிா... மேலும் பார்க்க

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty Resource Personகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.80,000... மேலும் பார்க்க

சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை வேண்டுமா?

சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Pilot(Contract basis)காலியிடங்கள்: 2சம்பளம்: பயிற்சி விமானி (பய... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா?

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியரல்லாத குரூப் 'ஏ', 'பி' மற்றும் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வர... மேலும் பார்க்க