செய்திகள் :

4கே தொழில்நுட்பத்தில் காஸாவில் நிகழும் இனப்படுகொலை..! இஸ்ரேலுக்கு எதிராகப் பேசிய நடிகர்!

post image

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம், “இஸ்ரேல் 4கே தொழில்நுட்பத்தில் நமது கண்களின் முன்பாக காஸாவில் இனப்படுகொலை நடத்திவருகிறது” எனக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - காஸா போர் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலினால் காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 55,000 கடந்துள்ளது.

ஜேவியர் பார்டெம் நடித்துள்ள எஃப்1 படத்தின் புரமோஷன் ஒன்றில் தொலைக்காட்சி நேரலையில் தனது பாலஸ்தீன ஆதரவு கருத்தை தைரியமாகக் கூறியதால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

Javier Bardem attends the world premiere of "F1 The Movie"
நியூயார்க் பட புரமோஷனில் நடிகர் ஜேவியர் பார்டெம்.

மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் குறித்து கடுமையாக விமர்சித்தார். உடன் இருந்த அலிசா ஃபரா கிரிஃபினின் பதிவுகளைச் சுட்டிக்காட்டி கண்டித்துப் பேசியதும் மிகவும் சர்ச்சையானது.

பின்னர், வெரைட்டி ஊடகத்திற்காக ரெட் கார்பெட் நேர்காணலில் அவர் பேசியதாவது:

4கே தொழில்நுட்பத்தில் நிகழும் இனப்படுகொலை

நாம் புனைவுகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் நிஜ உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

உண்மையான உலகில், காஸாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் பலியாகிறார்கள்.

4கே தொழில்நுட்பத்தில் நமது கண்களின் முன்பாக இனப்படுகொலை நடந்தேறி வருகிறது.

குழந்தைகளைக் கொல்ல வெடிகுண்டுகளை அளிக்கும் அமெரிக்காவின் பொருளாதார ஆதரவுகள் நிறுத்தப்பட வேண்டும்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுடனான நட்புறவை முறித்துக்கொள்ள வேண்டும். வார்தைகள் பேசியது போதும், நமக்குத் தேவை செயல்கள் என்றார்.

ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்! டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக் கணிப்பு!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - பாகிஸ்தான் ராணுவத் தளபதி பரிந்துரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் வலியுறுத்தியுள்ளார்.5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் ... மேலும் பார்க்க

ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை: பாகிஸ்தான்

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் த... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை!

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பீரங்கி எதிர்புப் படையின் தளபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. லெபானின் தெற்குப் பகுதியிலுள்ள நபாட்டியா மாகாணத்தில், இஸ்ரேல் ராண... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஈரான் போரால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 நாட... மேலும் பார்க்க

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்கள்!

இஸ்ரேல் பிரதமர் செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தலை... மேலும் பார்க்க