செய்திகள் :

ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்! டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக் கணிப்பு!

post image

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில் பெரும் அமைதியின்மை நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரானுக்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து, 1000 பேரிடம் தி வாஷிங்டன் போஸ்ட் கருத்துக் கணிப்பு நடத்தியது.

ஆய்வில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் முடிவுக்கு 47 சதவிகிதத்தினர் ஆதரவும், 24 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 29 சதவிகிதத்தினர் கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிய வந்தது.

அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு கட்சியினர், அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியில், 47 சதவிகிதத்தினர் ஆதரவாகவும், 24 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 29 சதவிகிதத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேபோல, டிரம்பின் ஆதரவாளர்களில், 46 சதவிகிதத்தினர் ஆதரவாகவும், 26 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 28 சதவிகிதத்தினர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இதையும் படிக்க:ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா!

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - பாகிஸ்தான் ராணுவத் தளபதி பரிந்துரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் வலியுறுத்தியுள்ளார்.5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் ... மேலும் பார்க்க

ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை: பாகிஸ்தான்

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் த... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை!

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பீரங்கி எதிர்புப் படையின் தளபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. லெபானின் தெற்குப் பகுதியிலுள்ள நபாட்டியா மாகாணத்தில், இஸ்ரேல் ராண... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஈரான் போரால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 நாட... மேலும் பார்க்க

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்கள்!

இஸ்ரேல் பிரதமர் செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தலை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து..! இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்ப... மேலும் பார்க்க