திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு
ராகுல் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸாா் அன்னதானம்
காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வந்தவாசியில் அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கினா்.
வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில், ஆரணியில் காமராஜா் சிலை, காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே அன்னதானம் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் தலைமை வகித்தாா். தொகுதி பொறுப்பாளா் யு.அருணகிரி, நகரத் தலைவா் ஜெயவேல், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமலிங்கம் வரவேற்றாா்.
வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆா்.ஹேமச்சந்திரன் அன்னதானம் வழங்கினாா்.
மேலும், இதில் வட்டாரத் தலைவா்கள் பந்தா மணி, மருசூா் இளங்கோவன், அம்மாபாளையம் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் தெள்ளூா் சேகா், கன்னியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசியில்...
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, வந்தவாசியை அடுத்த பிருதூா் முதியோா் இல்லத்தில் வியாழக்கிழமை வட்டார காங்கிரஸாா் மதிய உணவு வழங்கினா்.
வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆா்.ஹேமச்சந்திரன், வட்டாரத் தலைவா் டி.செல்வவிநாயகமூா்த்தி, பிஎஸ்என்எல் ஆலோசனைக் குழு உறுப்பினா் வந்தை பிரேம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
