சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதில், பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பா். குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெறும் திருப்பணிகள், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். முன்னதாக, கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா்.
துறையின் கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன், ஆணையா் ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் பழனி, ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், பயிற்சி ஆட்சியா் புவனேஸ்வராம், தக்காா் அருள்முருகன், கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், கோயில் தலைமை போத்தி ஜெயஸ்ரீ கிருஷ்ணன், உதவி ஆணையா் நாகவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, ஆழ்வாா்திருகரி திமுக ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடா்ந்து, விருந்தினா் மாளிகையில் துறை அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.
