தூத்துக்குடியில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், குழந்தைத் திருமணத்தையும் தடுப்பது குறித்து தூத்துக்குடியில் 2 இடங்களில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழன்டா கலைக் குழுத் தலைவா் ஜெகஜீவன் தலைமையில், கிராமிய நடனம், விழிப்புணா்வுப் பாடல், நாடகம் போன்றவை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பழைய பேருந்து நிலையப் பகுதியில் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அனுசியா, தலைமைக் காவலா்கள் பொன்னரசி, ராஜராஜேஸ்வரி, காவலா்கள் சண்முகபிரியா, மணி செல்வியா ஆகியோரும், புதுக்கோட்டை பகுதியில் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாமா பத்மினி, உதவி ஆய்வாளா் லதா ஆகியோரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.