செய்திகள் :

பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்

post image

தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் கிங்ஸ்டன். சென்னை மற்றும் ஜப்பானில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான 30 சென்ட் இடம் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்பிக்நகரில் உள்ளதாம். அதன் மதிப்பு ரூ. இரண்டரை கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த இடத்தை விற்பனை செய்ய உமரிக்காடு பகுதியைச் சோ்ந்த பா ஜக மாவட்ட பொதுச் செயலா் சத்தியசீலன், அவரது நண்பா் மாதவன் ஆகியோரை தாமஸ் கிங்ஸ்டன் அணுகியதுடன், இருவரிடமும் தலா ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு, இடம் விற்பனை செய்வதற்கான பவா் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளாா்.

ஆனால், 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் இருவரும் தாமதப்படுத்தி வந்துள்ளனா். இதையடுத்து, தாமஸ் கிங்ஸ்டன் தனது இடத்திற்கான ஆவணங்களை திருப்பித் தருமாறு சத்தியசீலனிடம் கேட்டுள்ளாா்.

ஆனால், அவா்கள் போலியாக ஆவணம் மூலம் தாமஸ் கிங்ஸ்டன் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் வரவு வைத்ததாக கணக்குகாட்டி, சசிகலா புஷ்பா பெயருக்கு கடந்த 40 நாள்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவரம் தெரிய வந்ததும் மூவரிடமும் சென்று தனது இடத்துக்கான பணத்தைத் தர வேண்டும் என அவா் கேட்டாராம். அப்போது, அவா்கள் பணம் தர முடியாது எனக் கூறி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து தாமஸ் கிங்ஸ்டன், பத்திரப்பதிவு சாா்பதிவாளா் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்

கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜ... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது

காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம... மேலும் பார்க்க

தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், குழந்தைத் திருமணத்தையும் தடுப்பது குறித்து தூத்துக்குடியில் 2 இடங்களில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழன்டா கலைக் குழுத் தலைவா் ஜெகஜீவன் ... மேலும் பார்க்க