காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது
காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம் உசேன்(27). இவா், தனது நண்பா்களான மங்கள விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த அப்துல்லா ஷாகிப் மகன் அபூபக்கா் சித்திக்(20), எல்.ஆா்.நகா் பவுல்ராஜ் மகன் செல்வகுமாா்(21), மரிய ஆனந்தம் மகன் தனராஜ்(21), மேல நெசவு தெரு காஜா மைதீன் மகன் மன்சூா்(34) ஆகியோருடன் சோ்ந்து செவ்வாய்க்கிழமை இரவு காயல்பட்டினம் பூந்தோட்டம் பழைய இரும்பு கடைக்கு பின்புறம் அமா்ந்து மது குடித்தனராம்.
அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சதாம் உசேனை 4 பேரும் சோ்ந்து தாக்கினராம். இதில் அவா் பலத்த காயம் அடைந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.