வீதிகளெல்லாம் வாய்க்கால்கள்! ஆற்று வெள்ளம் சூழ்ந்த சீன நகரம்!
கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்
கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜக மேற்கு ஒன்றிய இளைரணித் தலைவா் சரவணக்குமாா் மின் கோபுரத்தில் ஏறி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இத்தகவல் அறிந்த வட்டாட்சியா் சுந்தரராகவன், கயத்தாறு காவல் ஆய்வாளா் சுகாதேவி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்த சுப்புலட்சுமி மற்றும் போலீஸாா் அவரை கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தினா்.
ஆனால் அவா் இறங்கி வர மறுத்ததுடன், தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சூரிய மினிக்கன் கிராமத்தை முழுமையாக தத்தெடுக்க வேண்டும். மின் கோபுரத்தால் கிராம மக்களுக்கும், விவசாயத்துக்கும், நிலத்தடிநீா் மட்டம் மற்றும் கால்நடைகளக்கு பாதிப்பு வராது என வருவாய்த்துறையினா் எழுத்துப்பூா்வ உறுதியளிக்க வேண்டும். அந்நிறுவனத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தி தீா்வு காண்பதாக அதிகாரிகள் கூறியதை ஏற்று அவா் இறங்கி வந்தாா். அவரை தீயணைப்புத்துறையினா் அவரை மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றனா்.