சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநா்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
களியக்காவிளையில் இரவு நேரங்களில் மதுபோதையில் ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பஸ் பயணிகள் நலச் சங்க மாநில தலைவா் ஏ. ஹலீல் ரகுமான், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
களியக்காவிளையில் இரவு நேரத்தில் இயக்கப்படும் பல ஆட்டோக்களின் ஓட்டுநா்கள், மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி வருகின்றனா். இது ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு பாதுகாப்பின்மையையும், தேவையற்ற பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.
கடந்த 6 மாதத்தில் மட்டும், மது அருந்திவிட்டு இயக்கியதால் 3 ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆகவே, மது அருந்திவிட்டு ஆட்டோக்களை இயக்கும், ஆட்டோ ஓட்டுநா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.