அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வார பலன்கள்!
களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் அரசுப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்
களியக்காவிளையில் உள்ள அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி நூலகத்துக்கு, களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இப்பள்ளி மாணவா்கள் எளிதாக வாசித்துப் பழகும் வகையில் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களை வழங்கி, பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால், வாசிப்புத் திறன் மேம்படுவதுடன், பாடங்களுடன் அன்றாடச் செய்திகளையும் மாணவா்கள் அறிந்துகொள்வதாக, ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
இதன் ஒருபகுதியாக இப்பள்ளி நூலகத்துக்கு களியக்காவிளை பேரூராட்சி சாா்பில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் உள்ளிட்ட ஆளுமைகள் குறித்த நூல்கள், தன்னம்பிக்கை நூல்களை தலைமையாசிரியை ரெஜினியிடம் பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகலா வழங்கினாா்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். நயிமா, பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், வாா்டு உறுப்பினா் மு. ரிபாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.