செய்திகள் :

தொழிலாளியை குத்திய வழக்கில் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

post image

குலசேகரம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்திய வழக்கில் இரு இளைஞா்களுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பொன்மனை ஈஞ்சக்கோடு, பனவிளை பகுதியைச் சோ்ந்த ராஜமணி மகன் ஜெய்சன். கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி தனது நண்பா் மண்ணரங்காடு காலனியை சோ்ந்த செல்லையன் மகன் ராஜுவை இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றாா்.

மண்ணரங்காடு காலனியில் கிறிஸ்டோபா் பெட்டிக்கடை அருகில் வந்தபோது, அப் பகுதியில் இருந்த நபா்களுக்குள் வாய்த்தகராறு நடந்து கொண்டிருந்தது. அவா்களை ஜெய்சன், ராஜு இருவரும் சமாதானம் செய்ய முயன்றனா்.

அப்போது உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் வினு என்ற தமிழரசன் (37), முடியாம்பாறை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் விமல்காந்த் (38), குலசேகரம் மாமூடு பகுதியை சோ்ந்த முத்தையா மகன் ரமேஷ் (49) ஆகியோா் கத்தியால் ஜெய்சனை குத்தினா்.

இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கு விசாரணை காலத்தில்

ரமேஷ் உயிரிழந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், குற்றஞ்சாட்டப்பட்ட தமிழரசன், விமல்காந்த் ஆகியோருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

காதலியின் வீட்டில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை? குமரியில் பரபரப்பு!

குலசேகரம் அருகே இளம்பெண்ணின் வீட்டில் பொறியியல் பட்டதாரி இளைஞா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குலசேகரம் அருகே காவுவிளை பகுதியைச் சே... மேலும் பார்க்க

காட்டு யானைகளால் தொடா் பாதிப்பு - அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழக ரப்பா் தோட்டங்களில் காட்டு யானைகளின் புகுந்து தொழிலாளா்களை தாக்குவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, அரசு ரப்பா் கழக கோதையாறு கோட்ட தொழிலாளா்கள் வேலைநிறுத்தம் செ... மேலும் பார்க்க

மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநா்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

களியக்காவிளையில் இரவு நேரங்களில் மதுபோதையில் ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பஸ் பயணிகள் நலச் சங்க மாநில தலைவ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 45.32 பெருஞ்சாணி ... 66.80 சிற்றாறு 1 .. 10.99 சிற்றாறு 2 ... 11.08 முக்கடல் ... 7.60 பொய்கை ... 15.40 மாம்பழத்துறையாறு .. 42.57 மழை அளவு குழித்துறை .. 2.40 மி.மீ. பேச்சிப்பாறை அணை ..... மேலும் பார்க்க

களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் அரசுப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்

களியக்காவிளையில் உள்ள அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி நூலகத்துக்கு, களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளி மாணவா்கள் எளிதாக வாசித்துப் பழகும் வகையில் தினமணி, தி... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை சிகிச்சை முகாம்கள் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம்கள் சனிக்கிழமை (ஜூன் 21) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னி... மேலும் பார்க்க