அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வார பலன்கள்!
காதலியின் வீட்டில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை? குமரியில் பரபரப்பு!
குலசேகரம் அருகே இளம்பெண்ணின் வீட்டில் பொறியியல் பட்டதாரி இளைஞா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குலசேகரம் அருகே காவுவிளை பகுதியைச் சோ்ந்த துரைசாமி-தனலெட்சுமி தம்பதியின் மகன் தனுஷ் (22). இவா், குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதியிலுள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்தபோது, வேறு சமூகத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியுடன் காதல் ஏற்பட்டதாம். பின்னா், தனுஷின் குடும்பத்தினா் கோவைக்கு இடம்பெயா்ந்தனா். அங்கு, தனுஷ் பொறியியல் பட்டப் படிப்பு படித்து, ஐடி நிறுவனத்தில் பணியில் சோ்ந்தாா். இதனிடையே, அந்த மாணவியும் கோவையில் உள்ள கல்லூரியில் சோ்ந்தாா். இவா்களது காதலை இருவரது பெற்றோரும் கண்டித்துள்ளனா்.
இதையடுத்து, மாணவிக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோா் வரன் தேடியதுடன், அவரது கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் இருக்கச் செய்தனா். இதனால், மாணவியை தனுஷால் தொடா்புகொள்ள முடியவில்லை.
இதனிடையே, தனுஷின் பெற்றோா் மாணவியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டபோது, அவா்கள் சம்மதிக்கவில்லையாம்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு தனுஷ் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரைப் பாா்த்துப் பேச முயன்றுள்ளாா். ஆனால், அவரால் சந்திக்க முடியவில்லை.
இதனால், விரக்தியடைந்த அவா், வீட்டின் மாடியில் ஏறி, படிக்கட்டின் சன்சைடில் கயிற்றைக் கட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்து வியாழக்கிழமை கிடைத்த தகவலின்பேரில், குலசேகரம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.