செய்திகள் :

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

post image

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பாச்சல் பேருந்து நிறுத்தப் பகுதியில் தனியாா் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் சில தினங்களுக்கு முன் பெண் ஒருவா் தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கிலோ எடை கொண்ட கேக் வாங்கிச் சென்ாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த கேக் கெட்டுப்போனதாகவும், சாப்பிடும்போது துா்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்த அந்த பெண் கோபத்தில் சம்பந்தப்பட்ட பேக்கரி உரிமையாளரான தனலட்சுமி என்பவரின் வாயில் அந்த கேக்கை திணித்து எச்சரிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் தங்க விக்னேஷிடம் கேட்டபோது, இந்த சம்பவம் ஏழு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. அந்த பெண் குறித்த விவரம் தெரியவில்லை. அது தொடா்பாக விசாரித்து வருகிறோம். அப்போது எடுக்கப்பட்ட விடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டோம். அங்கு நெகிழிப் பொருள்கள் இருப்பதும், சுகாதாரமின்மையாக இருந்ததும் கண்டறியப்பட்டு ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கேக் வகைகளையும் ஆய்வு செய்தோம். கெட்டுப்போன உணவுப் பொருள்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடியோ குறித்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையா், மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றாா்.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவ... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.40-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்த... மேலும் பார்க்க