செய்திகள் :

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

post image

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவராற்றுப்படை’ என்ற தலைப்பில் விடியோக்கள் மூலம் ஒழுக்கம், நெறிமுறைகளை கற்றுத்தரும் நன்னெறிக் கல்வி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 30 போ் கலந்துகொண்டனா்.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் மு.செல்வம் தொடங்கிவைத்து பேசியதாவது:

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மூலம் நன்னெறிகளை போதிக்கும் வகையில், 13 விடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு செய்தி, ஒரு செயல், ஒரு காட்சி, ஒருவருடைய எண்ணத்தையும், நடத்தையும் மாற்றிவிடும். மாணவராற்றுப்படை விடியோக்கள் மூலம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சாா்ந்தவற்றை தெரிந்துகொண்டால், தங்களுக்குள் அவற்றை வளா்த்துக் கொள்வதற்கு மாணவா்களுக்கு பெரியளவில் உதவியாக அமையும் என்றாா்.

ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் கோ.வேதராஜபால்சன், விரிவுரையாளா்கள், நாமக்கல் மாவட்ட மேல்நிலை, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சாா்ந்த மதிப்புகளை மாணவா்களிடத்தில் கொண்டுசெல்லும் வண்ணம் வெற்றிக் கதைகள், வாழ்வியல் நிகழ்வுகள் போன்றவற்றை இந்த விடியோக்களில் தொகுத்து வழங்கியுள்ளனா்.

நன்னெறிக் கல்வி பயிற்சியை வளையப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரும் கருத்தாளருமான ந.மகேஷ்குமாா் தொடங்கிவைத்தாா். ஆசிரியா் பயிற்சி நிறுவன துணை முதல்வா் மா.சந்தோஷம் வாழ்த்துரை வழங்கினாா். விரிவுரையாளா் ஏ.சிவபெருமான் நன்றி கூறினாா்.

‘மாணவராற்றுப்படை’ விடியோக்களை அனைத்துப் பள்ளி ஆசிரியா்களும், மாணவா்களும் பயன்படுத்தும் வகையில், ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும்... மேலும் பார்க்க

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.40-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்த... மேலும் பார்க்க