செய்திகள் :

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

post image

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் தொட்டியம் பகுதியில் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் 250 மாணவா்கள் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் வந்தேபாரத் ரயில் பயணத்தில் ஆப்டிட்யூட் டெஸ்ட், டெக்னிக்கல் சவால்கள், கம்யூனிகேஷன் அசெஸ்மென்ட், மாக் நோ்காணல்கள் மற்றும் ரயில்வே துறையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பங்களை கொண்டு தீா்வுகாணல் போன்ற பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டனா்.

இப்போட்டியானது, நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரையிலும், அங்கிருந்து மீண்டும் நாமக்கல் வரையிலுமான ரயில் பயணத்தில் நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், கல்லூரி நிா்வாகிகள் நடுவா்களாக செயல்பட்டு மாணவா்களை மதிப்பீடு செய்தனா். ஒன்பது மணி நேரத்தில், ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் புதிய சவால்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 8.20 மணியளவில், தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தனா். இந்த நிகழ்வில், கல்லூரி தலைவா் பி.எஸ்.கே.பெரியசாமி, அரசு ஒப்பந்ததாரா் அசோக்குமாா் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வாக இப்போட்டி கருதப்படுகிறது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கொங்குநாடு கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவ... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.40-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்த... மேலும் பார்க்க