இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!
தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்
நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இணையம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளா்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளா்கள் மற்றும் பதிவுபெற்ற பெண், திருநங்கை ஓட்டுநா்களுக்கு சொந்தமாக ஆட்டோ மற்றும் காா் போன்றவை வாங்குவதற்கு ரூ. ஒரு லட்சம் மானியம் நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக, நாமக்கல் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் பதிவு நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தொழில்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் இணைய வழியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286 - 280220 என்ற எண் மூலம் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.