புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாமக்கல் வள்ளிபுரம் செல்லும் தடம் எண் வி-1 நகரப் பேருந்தை ஆண்டிப்பட்டிபுதூா், புள்ளாக்குமரன்பாளையம், ஆண்டிப்பட்டி பிரிவு, கீரம்பூா் வழியாக கீரம்பூா் பிரிவு வரையிலும், நாமக்கல்லில் இருந்து கருப்பட்டிபாளையம், பெரியூா் வழியாக தும்மங்குறிச்சி வரையிலும், நாமக்கல் - மோகனூா் செல்லும் தடம் எண் 12-பி நகரப் பேருந்து பெரமாண்டம்பாளையம் வழியாகவும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் செ.பூபதி, நாமக்கல் பணிமனை கோட்ட மேலாளா் ப.செங்கோட்டுவேலன் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.