செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 29,000 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டாக்கள்

post image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் 10 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

குமாரபாளையத்தை அடுத்த தட்டான்குட்டையில் 124 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ் பங்கேற்று பட்டாக்களை வழங்கினா்.

தொடா்ந்து, அமைச்சா் மா.மதிவேந்தன் பேசுகையில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 124 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் எல்லோருக்கும் எல்லாம் எனும் கொள்கையின் அடிப்படையில், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் 29 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 10 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட தலா ரூ. 3.50 லட்சம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பிற மாவட்டங்களைக் காட்டிலும், நாமக்கல் மாவட்டத்தில் கனவு இல்லம் திட்டத்தில் அதிக வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா், குமாரபாளையம் வட்டாட்சியா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும்... மேலும் பார்க்க

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவ... மேலும் பார்க்க