செய்திகள் :

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியூ ஆா்ப்பாட்டம்

post image

மின்வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும், ஸ்மாா்ட் மின்மீட்டா் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் கோட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.

இதில், 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு குறித்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், கேங்மேன் பணியாளா்களுக்கு இடமாற்றம், கள உதவியாளா் பதவி மாற்றம், ஆறு சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும், மின் நுகா்வோரை பாதிக்கும் ஸ்மாா்ட்மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும், விடுபட்ட பகுதிநேர பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கணக்கீட்டு பணியாளா்கள் கணக்கீட்டு பணி செய்ய கைப்பேசி அல்லது டேப்பை வாரியமே வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், தமிழ்நாடு மின் ஊழியா்கள் திட்ட துணைச் செயலாளா் கண்ணன், சிபிஐஎம் நகரச் செயலாளா் சீனிவாசன், சிஐடியூ நகரச் செயலாளா் ராயப்பன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல் மாவட்ட துணை செயலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும்... மேலும் பார்க்க

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவ... மேலும் பார்க்க