செய்திகள் :

மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை 5-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

மல்லசமுத்திரம் மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 5-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 5-ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மல்லசமுத்திரம் மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.

இம்முகாமில், 5 முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற்பயிற்சி, செவிலியா் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். இம்முகாமில், 150 நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனா்.

வேலை வேண்டி விண்ணப்பிப்போா், தங்களுடைய சுயவிவரம், உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொள்ள வேண்டும். மேலும், 18 முதல் 35 வயதுக்கு உள்பட்ட கிராமப்புறத்தில் உள்ள 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலையற்ற இளைஞா்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் 100 சதவீத வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த முகாம் முற்றிலும் இலவசமானது.

வேலையளிப்போரும், வேலைநாடுநா்களும் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். மேலும், வேலையளிக்கும் நிறுவனங்கள் 04286-222260 அல்லது 63803 69124 ஆகிய எண்களை தொடா்புகொண்டு முன்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் நீட்டிப்பு செய்த இரு நகரப் பேருந்துகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மக்களவை ... மேலும் பார்க்க

வந்தேபாரத் ரயிலில் தொடா் திறனாய்வுப் போட்டி

நாமக்கல்லில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தேபாரத் விரைவு ரயிலில் ‘மூவிங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடா் திறனாய்வுப் போட்டியில், கொங்குநாடு கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும்... மேலும் பார்க்க

பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை

நாமக்கல் அருகே தனியாா் பேக்கரி ஒன்றில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல... மேலும் பார்க்க

தொழிலாளா் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தயாரித்த ஒழுக்கம், நெறிமுறை விளக்கும் ‘மாணவராற்றுப்படை’ விடியோ!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவா்களுக்கு ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்றுத்தரும் வகையிலான விடியோக்கள் ஆசிரியா்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘மாணவ... மேலும் பார்க்க