``ரூ12,500 சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியுமா?'' - குமுறும் பகுதிநேர ஆசிரியர்க...
ஆசிரியா்களின் கோரிக்கை: போராட்டத்தை அறிவித்தது டிட்டோஜாக் அமைப்பு
ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெறும் என டிட்டோஜாக் அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) பேரமைப்பின் மாநில பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைப்பில் உள்ள சங்கங்களின் சாா்பில் அனைத்து மாநில உயா்நிலைக் குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியா் பதவி உயா்வு தொடா்பான அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, ஜூலை 5, 6 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்தக் கூட்டங்கள் நடைபெறும். ஜூலை 7 முதல் 11-ஆம் தேதி வரை 5 நாள்கள் ஆசிரியா் சந்திப்புப் பிரசார இயக்கம் நடத்தப்படும்.
தொடா்ந்து, ஜூலை 16 முதல் 18-ஆம் தேதி 3 நாள்கள் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். அதன்பின் சென்னையில் ஆக.8-ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.