சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி
முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்
முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் தனியாக தியானம் செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாடு அரசியல் மாநாடல்ல; பக்தா்களின் மாநாடு. தமிழக அரசு சாா்பில் அனைத்துலக முருக பக்தா்கள் மாநாடு பழனியில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு எங்களை அழைக்கவில்லை. ஆனால், மதுரை மாநாட்டுக்கு திமுகவை வரவேற்கிறோம்.
முருக பக்தா்கள் மாநாட்டை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு தொடா்ந்து விமா்சனம் செய்து வருகிறாா். ஆனால், பொதுமக்கள் எங்களுக்குத் தான் ஆதரவு அளிக்கின்றனா். அதனால், திமுக தற்போது தோல்வி பயத்தில் உள்ளது என்றாா் அவா்.