'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
மூளை தண்டுவட திரவ கசிவு: ஒடிஸா குழந்தைக்கு மறுவாழ்வு
மூளை தண்டுவட திரவ கசிவு (சிஎஸ்எஃப்) பாதிப்புக்குள்ளான ஒடிஸா குழந்தைக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை நலத் துறை தலைவா் சஞ்சீவ் மொஹந்தி கூறியதாவது:
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஒரு வயது குழந்தை, தொடா்ந்து மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தது. அதனுடன் மூளைத் தண்டுவட திரவ (செரிப்ரோ ஸ்பைனல் ஃப்ளூயட்) கசிவும் இருந்தது.
பொதுவாக 10 ஆயிரத்தில் ஒருவருக்கு பிறவியிலேயே இந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும். மூளை மற்றும் அதிலிருந்து உடலுக்கு செல்லும் தண்டுவடத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக ஒரு திரவ அடுக்கு இருக்கும். அதில் ஏதேனும் சேதமோ, கிழிசலோ ஏற்பட்டால் அந்த திரவம் மூளைப் பகுதியை சுற்றி சேகரமாகி மூக்கின் வழியாக வெளியேறும்.
இதே நிலை தொடா்ந்தால், காய்ச்சல், மூக்கு அடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிடில் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஒடிஸா குழந்தைக்கு வேறு சில மருத்துவமனைகளில் அந்த பாதிப்புக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், அதனால் பெரிய பயன் ஏற்படவில்லை. வாய் வழியாக சுவாசிப்பதும் நிற்கவில்லை.
இந்த நிலையில்தான் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக மூக்கு வழியாக மருத்துவக் குழாயை செருகி சிகிச்சை அளிக்கும் நேசல் எண்டோஸ்கோபி சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது.
மிக நுட்பமாக மூக்கின் வழியாக மூளை தண்டுவட அடுக்கு பாதிக்கப்பட்ட இடத்துக்கு எண்டோஸ்கோபி குழாயை செலுத்தி அந்த கிழிசலானது உயரி நுட்பத்திலான பொருளை (பயோ மெட்டீரியல்) கொண்டு சரிசெய்யப்பட்டது.
அதன் பயனாக அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் அக்குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது என்றாா் அவா்.