சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25 முதல் ஹவுராவுக்கு இயக்கப்படும்
சென்னையில் இருந்து இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவுக்கு இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஷாலிமருக்கு இடையே கோரமண்டல் விரைவு ரயில் (எண்: 12841/12842) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் இரு மாா்க்கத்திலும் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவிலிருந்து இயக்கப்படவுள்ளது.
அதன்படி, தினமும் சென்ட்ரலில் இருந்து வழக்கம் போல், காலை 7 மணிக்கு புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு ஹவுராவுக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் ஹவுராவில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5.10 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இதனால், ரயில் இயக்க நேரத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.