செய்திகள் :

``ரூ12,500 சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியுமா?'' - குமுறும் பகுதிநேர ஆசிரியர்கள்

post image

"காலமுறை சம்பளம் வழங்க முதல்வர் ஏற்பாடு செய்வார் என நம்பினோம், ஆனால் பணி நிரந்தரம் செய்யாமல் காலத்தை கடத்தி விட்டார்." என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வேன் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தார். ஆனால் முதல்வராகி 50 மாதம் ஆகும் நிலையில் பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்து வருவது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

15-வது கல்வி ஆண்டிலும் எங்களை தொகுப்பூதியத்திலே வைத்து இருப்பதால் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இன்றைய விலைவாசி உயர்வில் தற்போதைய 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியுமா என்பதை முதல்வர் ஒரு நிமிடம் நினைத்து பார்க்க வேண்டும்.

பல ஆண்டுகளாக வழங்கப்படாத மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி போன்றவற்றை முடிவுக்கு கொண்டு வந்து காலமுறை சம்பளம் வழங்க முதல்வர் ஏற்பாடு செய்வார் என நம்பினோம். ஆனால் பணி நிரந்தரம் செய்யாமல் காலத்தை கடத்தி விட்டார்.

திமுகவின் ஆட்சியில் இனி எஞ்சி இருக்கின்ற 10 மாதத்தில் அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வரும் முன்பே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட முதல்வர் ஸ்டாலின்தான் வழி காட்ட வேண்டும்.

பள்ளி கல்வித்துறை

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்னதை செயல்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், விதவைகளும் பெண்கள் மற்றும் ஏழை விளிம்பு நிலை மக்கள் தான் இந்த வேலையில் , 59 சதவிகிதத்துக்கும் மேலாக உள்ளார்கள். பலர் 50 வயதை கடந்து விட்டார்கள். இனி எஞ்சிய காலத்திலாவது நல்லபடியாக வாழ காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்

Israel: ``இஸ்ரேலின் சிறந்த நண்பர் ட்ரம்புக்கு நன்றி'' - நெதன்யாகு புகழ்ச்சிக்கு காரணம் என்ன?

இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரே... மேலும் பார்க்க

``கர்நாடக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்..'' - மத்திய அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி

கர்நாடக அமைச்சர்கள் கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர் பரமேஸ... மேலும் பார்க்க

Israel: ``ஈரான் போரால்தான் அவரால் ஆட்சியில் நீடிக்க முடியும்" - நெதன்யாகுவை சாடிய பில் கிளிண்டன்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அமெரிக்க செய்தியாளர்களிடம் பேசிய ... மேலும் பார்க்க

Iran Vs Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா; ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா.. என்ன நடக்கிறது?

இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரே... மேலும் பார்க்க

``கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' - காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அறிக்கை

பல ஆண்டுகளாக, இந்தியா, கனடா நட்பு நாடுகளாக இருந்து வந்தது. ஆனால், காலிஸ்தான் நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இந்த உறவில் விரிசல் வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பருப்பு உணவுகளைச் சாப்பிட்டாலே வாயுத்தொல்லை.. புரதச்சத்துக்கு என்னதான் வழி?

Doctor Vikatan: நான்சைவ உணவுப்பழக்கம் உள்ளவன். முட்டைகூட சாப்பிட மாட்டேன். புரதச்சத்துக்கு பருப்பு வகைகளை மட்டும்தான்சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக எந்தப் பருப்பு சேர்த்து ச... மேலும் பார்க்க