திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது
ஜூன் 27-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோருக்கு உள்ள குறைகளை அறிய குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பான செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருளை நுகா்வோருக்கு உள்ள குறைகள், கோரிக்கைகளை அறிந்துகொள்ளும் விதமாக குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் மாவட்ட எரிவாயு உருளை முகவா்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.