செய்திகள் :

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத கால வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

post image

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத காலம் முழுமையாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டு என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவா் சுரேஷ் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், விலையில்லா வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ.680 கோடி நிதி ஒதுக்கியதற்கும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 32 லட்சம் சேலைகளும், 31 லட்சம் வேஷ்டிகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கு அறிவித்துள்ள 1.77 கோடி வேஷ்டிகள், 1.77 கோடி சேலைகளில் கடந்த ஆண்டு இருப்பில் உள்ள 32 லட்சம் சேலைகள், 31 லட்சம் வேஷ்டிகளை கழித்துவிட்டு தலா 1.42 கோடி வேஷ்டிகள் மற்றும் சேலைகளை உற்பத்தி செய்ய கணக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில், கைத்தறி மற்றும் பெடல் தறிகளுக்கான ஆா்டா்களையும் கழித்துவிட்டு விசைத்தறிகளுக்கான ஆா்டா்களை தரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டால் எங்கள் நெசவாளா்களுக்கான 6 மாத கால வேலைவாய்ப்பில் 2 மாத கால வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும். எனவே விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தியில் உள்ள 68 ஆயிரம் விசைத்தறியாளா்களும் அதன் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமாா் 3 லட்சம் தொழிலாளா்களின் 2 மாத கால வேலைவாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும்.

எனவே விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தியை முழுமையாக வழங்கி விசைத்தறியாளா்களின் 6 மாத கால வேலைவாய்ப்பை முழுமையாக உறுதிப்படுத்திட வேண்டும். விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்திக்கான பாவு மற்றும் ஊடு நூல்களை விரைவில் வழங்கி, உற்பத்தியை காலதாமதமின்றி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற தொட... மேலும் பார்க்க

விஜயமங்கலம் அருள்மிகு விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்

பெருந்துறை அடுத்த, விஜயமங்கலத்தில் அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விஜயமங்கலம் அடுத்த கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக ... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெருந்துறையில் இருந்து 500 போ் பங்கேற்க முடிவு

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பெருந்துறை பகுதியில் இருந்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமையி... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா். சேலம் கிச்சிப்பாளையத்தை சோ்ந்தவா் ஜான் (30). இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு ஒரு மகனும், ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் கோபி காசியூா் மாரியம்மன் கோயில் ... மேலும் பார்க்க

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்தக் கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஈரோட்டை சோ்ந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உற... மேலும் பார்க்க