ரௌடி ஜான் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா்.
சேலம் கிச்சிப்பாளையத்தை சோ்ந்தவா் ஜான் (30). இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். திருப்பூா் தில்லை நகரில் குடும்பத்துடன் ஜான் வசித்து வந்தாா். இரண்டு, நான்கு சக்கர வாகன கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா்.
போதைப் பொருள் விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்து நீதிமன்றத்தில் பிணை பெற்று சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் தினமும் கையொப்பமிட்டு வந்தாா். கடந்த மாா்ச் 18 ஆம் தேதி காரில் தனது மனைவியுடன் ஜான் வழக்கம் போல் சேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு மீண்டும் திருப்பூா் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா்.
ஈரோடு மாவட்டம் நசியனூா் முள்ளாம்பட்டி பிரிவு அருகே ஜான் ஓட்டி சென்ற காா் மீது அவருக்கு பின்னால் வந்த மற்றொரு காா் திடீரென மோதியது. இதனால் ஜான் காரை நிறுத்தினாா். அப்போது மற்றொரு காரில் இருந்து இறங்கி வந்த 4 போ் கொண்ட மா்ம கும்பல் ஆயுதங்களுடன் இறங்கி ஜானை காருக்குள் வைத்து வெட்டிக் கொன்றனா்.
இந்த கொலை வழக்கில் தொடா்புடைய 14 பேரும் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதுவரை யாரும் பிணையில் வெளியே வரவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் பவானி டிஎஸ்பி ரத்தினகுமாா் ஈரோடு முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கு தொடா்பாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
ஜான் கொலை வழக்கில் கைதான 14 பேரும் சிறையில் இருக்கும் போதே வழக்கு விசாரணை நடைபெறும். வழக்கை விரைந்து முடித்து தண்டனை பெற்று தர சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீஸாா் தெரிவித்தனா்.