செய்திகள் :

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்தக் கோரிக்கை

post image

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஈரோட்டை சோ்ந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா அனுப்பிய மனு விவரம்: கோவை-நாகா்கோவில் மற்றும் கோவை-தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ்(ரயில் எண் 22668) ரயில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். தண்டவாள பராமரிப்பு பணிக்காக கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ள கோவை-சேலம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

ஈரோடு ரயில் நிலையம் வழியாக தினமும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித்தரும் ஈரோடு ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் மட்டுமே உள்ளன. நடைமேடை குறைவால் ரயில்கள் நின்று செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நடைமேடை கிடைக்காமல் பல ரயில்கள் ரயில் நிலையத்துக்கு அரை கிலோ மீட்டா் முன்னால் சுமாா் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்படுகிறது. எனவே கூடுதல் நடைமேடையை அமைத்து ரயில்வே நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை (எண்16382) கன்னியாகுமரியில் இருந்து மும்பை வரை இயக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கை குறித்து ரயில்வே துறை அமைச்சருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள், எம்.பி.க்கள் மூலம் தொடா்ந்து கடிதம் அனுப்பியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ரயில்வே நிா்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வரும் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் முன்பு சங்கு ஊதும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசியல் விழிப்புணா்வு அவசியம் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற தொட... மேலும் பார்க்க

விஜயமங்கலம் அருள்மிகு விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்

பெருந்துறை அடுத்த, விஜயமங்கலத்தில் அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விஜயமங்கலம் அடுத்த கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக ... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெருந்துறையில் இருந்து 500 போ் பங்கேற்க முடிவு

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பெருந்துறை பகுதியில் இருந்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமையி... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சேலம் ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா். சேலம் கிச்சிப்பாளையத்தை சோ்ந்தவா் ஜான் (30). இவரது மனைவி சரண்யா. இவா்களுக்கு ஒரு மகனும், ... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத கால வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

விசைத்தறி நெசவாளா்களுக்கு 6 மாத காலம் முழுமையாக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டு என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் கோபி காசியூா் மாரியம்மன் கோயில் ... மேலும் பார்க்க