ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெருந்துறையில் இருந்து 500 போ் பங்கேற்க முடிவு
மதுரையில் வருகின்ற 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் கலந்து கொள்ள பெருந்துறை பகுதியில் இருந்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமையில் 500க்கு மேற்பட்டவா்கள் செல்ல உள்ளனா்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து காலை 7.00 மணியளவில் பஸ்சில் செல்ல திட்டமிட்டுள்ளனா். ஆகவே மாநாட்டுக்கு செல்பவா்கள் காலை 6.00 மணியளவில் பஸ் ஸ்டாண்டுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
மாநாட்டுக்குச் செல்லும் பாஜகவினா்கள் மற்றும் முருக பக்தா்களுக்கு பெருந்துறை நகர பாஜக தலைவா் பூா்ணசந்திரன் தலைமையில் உணவு வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.